உலக நீதி – பாடல் 7 | கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 7

உலகநாதரின் உலக நீதி – பாடல் 7
Ulaga neethi poetry written by Ulaganathar.
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like