உலக நீதி – பாடல் 2 | நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் | Ulaganeethi – Poem 2



உலகநாதரின் உலக நீதி – பாடல் 2
Ulaga neethi poetry written by Ulaganathar.

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like